TooBrief Tech Get the app

ABP Tamil · GovernmentPolicies

Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே..

எங்களுக்கு போட்ட வாக்கு பிச்சையை கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் போடவில்லை என துரை வைகோ கடுமையாக சாடியுள்ளார். மிசா காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறை சென்றதாக சொல்லப்படும் விவகாரம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவர் எதற்காக சிறை சென்றார் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்ப இதற்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. அதேசமயம தவெக கூட்டணியில் உள்ள மதிமுகவின் எம்பி துரை வைகோ பேசும்போது, மிசாவின்போது ஸ்டாலின் கைதானது உண்மை. ஆனால் முழுமையான அரசியல் காரணத்துக்காக அல்ல என சொல்ல பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுகவினர் கடந்த இரண்டு நாட்களாக துரை வைகோவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Read original Open in app

Licensed summary · LicensedSummary