ABP Tamil · GovernmentPolicies
தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்?
வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் இணைந்து போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தாராபுரம் தொகுதியில் சிபிஐ, மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் களம் காண்கின்றன. சென்னை பாலன் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கட்சியின் முக்கிய முடிவுகளை அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன் தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து நிற்கும் கட்சியின் நிலைப்பாடு தொடரும் எனக் குறிப்பிட்டார்.
Licensed summary · LicensedSummary